Translate

சனி, 1 டிசம்பர், 2012


மலர்-2


முதல் தமிழ் மாநில BSNL ஒய்வு பெற்றோர் நலச்சங்க  மாநாடு
 கடலூர்  8-7-2007


         கைப்பேசி 9442228182,9442292582,9486868999   Email-aibsnlpwacuddalore@gmail.com     

          நமது முதல் தமிழ் மாநில BSNL ஒய்வு பெற்றோர் நலச்சங்க  மாநாடு    8-7-2007 அன்று செங்குந்தர் திருமணமண்டபம்,திருப்பாபுலியூர், கடலூரில்,நடந்தது. தமிழகமெங்குமிருந்து அனைத்து பகுதிகளில் இருந்தும் மூத்ததோழர்கள் கலந்துக்கொண்டனர்.தோழர் M.மருதவாணன்(கடலூர் நகர குடியிருப்போர் நலச்சங்கம்) வரவேற்பு குழு தலைவராகவும்,தோழர்,K.வெங்கடரமணன் கடலூர் வரவேற்பு குழு பொதுச்செயலராகவும், . தோழர் P.ஜெயராமன்  பொருளராகவும் இணைந்து கடலூர் மாநில,மத்திய அரசு ஊழியர்களின் பங்களிப்படுடன் BSNL அனைத்துச் சங்க பிரதிநிதி கள் ஒத்துழைப்புடன் ,வெற்றிகரமாக நடத்தியது..

   காலை 1௦ மணிக்கு கொடியேற்றத்துடன் மாநாடு இனிதே தொடங்கியது.தேசிய கொடியை S.அப்துல் காதர் மாவட்ட தலைவர் அவர்களும்,சங்க கொடியை தோழர் D.கோபாலகிருஷ்ணன் மாநில தலைவர் அவர்களும் ஏற்றினர். தோழர் D.கோபாலகிருஷ்ணன் மாநில தலைவர் TBPWA தலைமைத்தாங்கி கூட்டத்தை நடத்தினார். .மாநாட்டு விளக்கவுரை தோழர் V.ராமாராவ் பொதுச்செயலர் TBPWA எடுத்துரைத்தார்.
      
      தோழர்  P.S. ராமன்குட்டி கேரள மாநிலச்செயலர் ஓய்வூதியர் நலச்சங்கம் வர்கள் நமது சங்க அமைப்பு ன் தேவை என்பது பற்றியும் அதன் அவசியம் பற்றியும் தெளிவாக எடுத்து உரைத்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
     
     திரு G. அழகர்சாமி (PCCA TN ) அவர்கள் நமக்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்து நமது நிலுவைகளை எல்லாம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தார் என்பதை எடுத்துரைத்து நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும். உறுதியளித்தார். 
     
     தோழர் N.பாலகிருஷ்ணன் SDESNEA மாநிலச்செயலர் அவர்களும், தோழர்                 R.பட்டாபிராமன்  NFTE மாநிலச்செயலர் அவர்களும்,தோழர் S.நடராஜன் மாநிலச்செயலர் ஓய்வூதியர் நலச்சங்கம் சென்னை தொலைபேசி  அவர்களும் வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர். கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக K. ரவீந்திரன் DGM A&P அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

     மற்றும் கீழ்க்கண்ட நமது தோழமை சங்கத்தலைவர்களும், நிர்வாகிகளும், நமது சங்க பொறுப்பாளர்களும் மாநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று,தங்கள் உடல் உழைப்பினை  நல்கி, மாநாட்டினை வாழ்த்தி,மாநாடு வெற்றிப்பெற காரணமாக இருந்தார்கள். 

தோழர் R.அசோகன்  தலைவர் SNEA
தோழர் S.கனகசொருபன் மூத்த தொழிற்சங்க தலைவர்
தோழர்.D.புருஷோத்தமன் (த.அ.ஓ.ச)
தோழர் K.சுகுமாரன் (LIC)
தோழர் ஜெயபால் FNTO 
தோழர் P.வெங்கடேசன் (AIBSNLEA)
தோழர் வெங்கடாசலம் அஞ்சல் ஓய்வூதியர் நலச்சங்கம்
தோழர் I.M.மதியழகன் மாவட்டச்செயலர்,BSNLEU
தோழர் R.பாலசுப்ரமணியன்  TNGEA
தோழர் மணவாளன்  (LICEU)
தோழர் K.இளங்கோவன் BSNL SDE PRO
தோழர் S.முத்துகுமாரசாமி  BSNLEU
தோழர் P.வெங்கடேசன் SNEA BSNL
தோழர் A.அண்ணாமலை  BSNLEU
தோழர் S.வெற்றிவேல்  AIBCTES
தோழர் R.திருநாவுக்கரசு BSNL
தோழர் N.திருஞானம் BSNLEU
தோழர் N. வீரபாண்டியன்  AIJTOA  
தோழர் S.கேப்ரியேல் கடலூர்
தோழர் பிச்சுமணி, தலைவர் BSNLஓய்வூதியர் நலச்சங்கம் புதுவை 
தோழர் பாலகிருஷ்ணன்,   BSNLஓய்வூதியர் நலச்சங்கம் புதுவை 

  பிரதிநிதிகள் மாநாடு மாலை 2.30 மணிக்கு நடந்தது. சங்க அமைப்பு சட்டம்,விவாதங்கள்,நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   
      தோழர் C.K. நரசிம்மன்  பொருளாளர்,TBPWA  நன்றியுரை தெரிவித்தார்.
    
      மாலையில்நடந்தகருத்தரங்கத்திற்குதோழர்,K.வெங்கடரமணன் கடலூர் 
வரவேற்பு குழு பொதுச்செயலர், தலைமை ஏற்று நடத்தினார்.புதிய ஒய்வஊதிய திட்டம் யாருக்காக ? என்ற தலைப்பில் தோழர் கோபாலகிருஷ்ணன் மாநில தலைவர் TBPWA அவர்களும், தோழர் கங்காதரன்  மாநில தலைவர் TNGREA , தனியார்மயம் சமூகத் தீர்வாகுமா? என்ற தலைப்பிலும்  சொற்பொழிவாற்றி நல்ல பல கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
    
      தோழர் P.ஜெயராமன்  பொருளர்,வரவேற்புக்குழு,  மகிழ்ச்சி பொங்கநன்றிக் கூறி வெற்றியுடன்  நிகழ்ச்சியை நிறைவு செய்தார்..

       

       வயது ஒரு தடையல்ல
                நிச்சயம் நம்மால் முடியும்
       ஏனெனில் நாம்தான்
            நம்பிக்கையை விதிப்பவர்களும்
       நம்பிக்கையை வளர்ப்பவர்க்களுமான
            புதிய விடியலின்
            உழைப்பாளிகள் .

                                ..என்ற வாழ்த்ததினை தெரிவித்த  SNEA  கடலூருக்கு நன்றி


மாநாட்டு புகைப்படங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக